உத்தரப்பிரதேச மாநிலம் வார ணாசியில் ரூ.450 கோடி மதிப் பில் அமையவுள்ள புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி சனிக்கிழமையன்று அடிக்கல் நாட்டினார். 31 ஏக்கர் பரப்பளவில், 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலான இந்த மைதானத்தை 2025-க்குள் கட்டி முடிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மைதான திட்டமிடல் வரைபடத்தில், மைதான முகப்பு சிவன் கையில் இருக்கும் உடுக்கை போன்றும், மைதான விளக்கு கள் திரிசூலம் போன்றும் அமைக்கப்பட் டுள்ளது. இதுபோக அடிக்கல் நாட்டு விழாவின் போது பிரதமர் மோடி,“சிவ னின் நகரமான வாரணாசியில் அமைய வுள்ள இந்த கிரிக்கெட் மைதானம், சிவ னுக்கு சமர்ப்பிக்கப்படும்” என வெளிப்ப டையாக மத உணர்வைத் தூண்டியுள்ளார். இந்நிகழ்ச்சியின்போது “நமோ” என்று எழுதிய இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை பிரதமர் மோடிக்கு முன் னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் பரிச ளித்தார்.